5
June, 2026

A News 365Times Venture

5
Friday
June, 2026

A News 365Times Venture

`ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் தோற்றோம்' – பொதுவெளியில் போட்டுடைத்த தவெக வேட்பாளர்! – என்ன நடந்தது?

Date:

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராகப் போட்டியிட்டவர், அதியமான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இந்த நிலையில், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அதியமான், “ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள சேலம் மேற்கு தொகுதியின் நம்முடைய வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கி பெற்றிருக்கிறார்.

தோல்வியடைந்த வேட்பாளர் அதியமான்

ஆனால், பக்கத்து தொகுதியில் எதுவும் நாம் தரவில்லை என மக்கள் அதிருப்தி அடைந்தனர். மாதக்கணக்கில் மக்களிடம் சென்ற சேர்த்த பிரசாரம் அனைத்தும் இவர் கொடுத்த பணத்தால் வீணானது. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் நமக்கு வராமல் போனதால் தோல்வி ஏற்பட்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தவெக எம்.எல்.ஏ ஓட்டுக்கு பணம் கொடுத்து தான் வெற்றிபெற்றார் என அக்கட்சியில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர் ஒருவர் பொதுவெளியில் பேசியிருப்பது, பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Annamalai: `கர்நாடக சிங்கம் – விவசாயி – பாஜக – தனிக்கட்சி.!' – அண்ணாமலை கடந்து வந்த பாதை! | Timeline

ஐ.பி.எஸ் வேலையை விட்டு விவசாயத்தில் கவனம் செலுத்திய சாதாரண விவசாயி தமிழ்நாட்டு...

“பாஜக-வுடனான நமது பார்வைகள் ஒத்துப்போகவில்லை!" – அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தில் இருப்பது என்ன?

பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக...

“அமைச்சர் ரீல்ஸ் போடுவதில் என்ன தவறு? இப்போதே விமர்சிக்கக் கூடாது" – எம்.பி கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக காங்கிரஸின் பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை...