28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

ஐதராபாத் சாலைக்கு 'டொனால்ட் ட்ரம்ப்' பெயர்: 'இப்படி கௌரவிக்கப்படும் முதல் அதிபர்' – ட்ரம்ப் பெருமை

Date:

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23, 2026), தெலுங்கானா ஐதராபாத்தில் சாலை ஒன்றிற்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் அந்தச் சாலைக்கு முன்பு, ‘அமெரிக்கத் தூதரக சாலை’ என்று பெயர் இருந்தது.

அதை மாற்றி தான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிக்கும் வகையில் ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தச் சாலை அமைந்திருக்கும் பகுதியில் தான் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலை பெயர் திறப்பு விழா

சாலைக்குப் புதிய பெயர் வைக்கும் நிகழ்வில் இந்தியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் செர்ஜியோ கர் கலந்துகொண்டு பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.

பெயர் காரணம் என்ன?

இந்தப் பெயர்‌ மாற்றம் குறித்து தெலுங்கானா அரசு, “இது அமெரிக்காவிற்குச் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகவும், அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவில் ஹைதராபாத்தின் வளர்ந்து வரும் முக்கியப் பங்கிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்பின் ‘நன்றி’

சாலைக்கு தனது பெயர் வைத்ததற்கு நன்றி தெரிவித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “இந்தியாவின் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ – இந்த வகையில் கௌரவிக்கப்படும் முதலாவது அமெரிக்க அதிபர் நான். மிக்க நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமைச்சர் சரத் குமார் வீடியோ: “விளக்கமளிக்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்" – தமிழிசை

தவெக அமைச்சர் சரத் குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று...

மேகதாது அணை: 'தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?' – ஜோதிமணி பதில்

கரூர் மாவட்டத்தில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட...

"அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே அடுத்த லட்சியம்" – மாணிக்கம் தாகூர் உறுதி

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார்....

திருவாரூர்: '50 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லை' – வயல் வழியாக எடுத்துச் செல்லப்படும் அவலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுககுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரைச்...