21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

'எடப்பாடி பழனிசாமி, வேலுமணிக்கு அடுத்து அண்ணாமலை' – அடுத்தடுத்து டெல்லி விசிட்; காரணம் என்ன?

Date:

நேற்று முன்தினம், தமிழ்நாட்டில் பரபரப்பாக சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ டெல்லிக்கு பயணமானார்.

‘அதிமுக அலுவலகத்தை காண’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அன்று மாலை முன்னாள் அமைச்சர் மற்றும் இப்போதைய அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியும் டெல்லிக்கு சென்றார்.

இதனையடுத்து, இரண்டு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.2025) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.

அமித் ஷா பதிவு

இந்த சந்திப்பிற்கு பிறகு, அமித் ஷா, “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி – தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பயண பின்னணி

எடப்பாடியின் விளக்கம் என்ன? 

ஆனால், இதற்கு நேர்மாறாக, எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,

எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்,

தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும்,

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்,

கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது” என்று டெல்லி பயணம் குறித்து விளக்கமளித்தார்.

அண்ணாமலை எதற்கு செல்கிறார்?

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி டெல்லி விசிட்டிற்கு பிறகு, இன்று அண்ணாமலையும் டெல்லிக்கு செல்கிறார்.

இந்தப் பயணத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமையுடன் ஆலோசனை நடத்துவார் அண்ணாமலை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ – நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது...

இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? – தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர்...

ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? – 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains

10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களின் பதவிக்காலம் முடிவடைய...