21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' – மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

Date:

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் தற்போது சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “இன்று, ‘சுயசார்பு இந்தியா, பாதுகாப்பான இந்தியா, மற்றும் வளர்ந்த இந்தியா’ என்ற இலக்குகளை நோக்கிய ஒரு முக்கியத் திட்டம் இந்த மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன்புதான், ‘ஐ.என்.எஸ் அக்ரே (INS Agray)’, ‘ஐ.என்.எஸ் துணாகிரி (INS Dunagiri)’ மற்றும் ‘ஐ.என்.எஸ் சன்சோதக்’ ஆகிய மூன்று கப்பல்களும் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்திய கப்பல்

தற்செயலாக, இன்று ஜூன் 21-ம் தேதி உலக ஹைட்ரோகிராபி (நீர்வரைவியல்) தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், இந்தியாவின் அதிநவீன ஹைட்ரோகிராபி கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக்-ஐ நாம் கடற்படையில் இணைத்திருப்பது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு.

இன்று பாதுகாப்புத் துறையில் இந்தியா வெறும் வாங்குபவராக (Buyer) மட்டுமே இருக்க விரும்பவில்லை. நமது ராணுவ பலம் உலக நாடுகளுக்கான ஒரு சந்தையாக மட்டும் இருக்க முடியாது.

எனது நாட்டின் வலிமையின் அடையாளம் உலகச் சந்தையாக மாறுவதில் இல்லை, மாறாக நமது சுயசார்பில் உள்ளது.

இந்தியா ஒரு உற்பத்தியாளராக மாற விரும்புகிறது; நாம் உற்பத்தியாளராக மாறும் நாளில், நாமே முடிவெடுப்பவர்களாகவும் இருப்போம்.

இந்தத் திசையில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது” என்று கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தள்ளி நிற்கும் ஸ்டாலின்… நெருக்கம் காட்டும் ராகுல் – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

"அன்புச் சகோதரர்" மிஸ்ஸிங்மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு...

மாதப்படி வழக்கு: `மீண்டும் ஆஜராகுங்கள்'-பினராயி விஜயன் மகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் தனியார் நிறுவனம் மற்றும் சி.பி.எம்...

"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட…" – பெ. சண்முகம் கருத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும்...

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள்...