15
April, 2025

A News 365Times Venture

15
Tuesday
April, 2025

A News 365Times Venture

`ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது’ – தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Date:

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது தவறானது எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு – ஸ்டாலின் – ஆர்.என்.ரவி

இது தொடர்பாக அரசு செயலாளர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது 08.04.2025 தேதியிட்ட மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் அடிப்படையில். கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்முடிவு எண் 48/2022, தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும். அதன் அடிப்படையில் 10 மசோதாக்களும் சட்டமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதாவும் சட்டமாகியுள்ளது. இதனால் இனிமேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வர் வசமாகியுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று...

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும்,...

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர்...

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை… அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல்...