9
July, 2026

A News 365Times Venture

9
Thursday
July, 2026

A News 365Times Venture

ஆலங்குளம்: அரசு நெல் சேமிப்பு மையத்தில் பயங்கர தீ – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம்?

Date:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில் செயல்பட்டு வரும் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக கடையம் போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் அமைந்துள்ள திறந்தவெளி அரசு சேமிப்பு மையத்தில் பாதுகாப்பாக குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்த இந்த சேமிப்பு மையத்தில் மொத்தம் 27 ஆயிரம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த இந்த நெல் மூட்டைகள், பின்னர் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 10 மணி அளவில், சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் இருந்து புகை வெளியேறுவதை அங்கிருந்த காவலாளர் கவனித்தார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பலத்த காற்று வீசியதால், தீ மளமளவென அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கும் வேகமாக பரவியது. அப்பகுதியில் தீயணைக்கும் பணி தொடர்ந்து இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது.

தகவலறிந்ததும் ஆலங்குளம், சுரண்டை மற்றும் தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் தீப்பற்றிய நெல் மூட்டைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயை அணைக்கும் பணியின் போது அதிகளவில் தண்ணீர் பாய்ச்சப்பட்டதால், தீயில் கருகாத பல நெல் மூட்டைகளும் தண்ணீரில் நனைந்து பயன்பாடற்ற நிலையில் சேதமடைந்தன. இந்த விபத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ சேத மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. தன்னிச்சையான வெப்ப உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ஆய்வு செய்யப்படுவதோடு, மர்ம நபர்கள் யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் கடையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன், தமிழக வெற்றி கழக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி இணைந்து தீயில் சேதமடைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சேதத்தின் முழுமையான விவரங்களை கணக்கிட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அரசு நெல் சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விவசாயிகளிடையிலும் கவலையை உருவாக்கியுள்ளது. தீ விபத்திற்கான உண்மையான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சேதத்தின் முழுமையான விவரங்கள், அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம்...

"அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" – ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்...

`திமுக, அதிமுக-வுக்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும்' – அமைச்சர் நிர்மல்குமார் ஆருடம்

கோவை மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு...