1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

“அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்'' – பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

Date:

‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் வந்துவிடுமா?’ – ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, உலகம் முழுக்க இருக்கும் பரபர கேள்வி இது.

‘தக்க நடவடிக்கைகள் எடுப்போம்’ என்று இந்தியா அடுத்தடுத்த காய்களை நகர்த்தி வருகிறது. நேற்று கூட, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து இருந்தார்.

பதிலுக்கு பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்தி வருகிறது.

ராஜ்நாத் சிங்

இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பேட்டி ஒன்றில், “இப்போதைய சூழலுக்கு தேவைப்படுவதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தி உள்ளோம்.

இந்த சூழலில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதனால், அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் மோதல்போக்கு அதிகரித்துவிட்டது. அதனால், இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளது என்று அரசாங்கத்திடம் பாகிஸ்தான் ராணுவம் தெரியப்படுத்தி உள்ளது.

எங்களுடைய நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே அணு ஆயுதங்தள் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘இந்தத் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை வேண்டும். நாங்கள் அந்த விசாரணையில் கலந்துகொள்ள தயார்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இன்று கர்நாடகாவில் SIR: 11 பாயின்ட்டுகளில் தேர்தல் ஆணையத்திற்கு `செக்' வைக்கும் கர்நாடகா அமைச்சரவை!

இன்று (ஜூன் 30, 2026) முதல் கர்நாடகாவில் சிறப்பு தீவிர திருத்தம்...

ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி...

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ – எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை...

`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ – கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர்,...