14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: `பாதிக்கப்பட்ட மாணவியைக் குற்றம்சாட்டுவதா?' – உச்ச நீதிமன்றம் காட்டம்

Date:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் (FIR) இணையத்தில் கசிந்த விவகாரம், காவல்துறை மீது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளித்திருந்ததும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

பாலியல் தொல்லை

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து, கருத்துத் தெரிவித்திருக்கிறது. அதில், சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR லீக் ஆன விவகாரத்தில் காரணமானவர்கள் ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்த அதிகாரிகளிடம் இருந்து ரூ.25 லட்சம் வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது குறித்து கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், “FIR லீக் ஆனதால் தான் மாணவி மீது மற்றவர்கள் குற்றஞ்சாட்டும் கொடுமை அரங்கேறியுள்ளது. மாணவியின் செயல்தான் குற்றம் நடைபெற காரணம் என்பது போல் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

பாதிக்கப்பட்ட மாணவி தான் குற்றம் நடைபெற காரணம் என சமூகத்தில் கருத்துகள் கூறப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியை குற்றத்திற்கு காரணம் என கூறுவது குற்றவாளிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்” என்று தெரிவித்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`₹ குறியீடு கொண்ட கலைஞர் நினைவு நாணயங்களை வீசி எறிந்து விடுமா திமுக?' – அன்புமணி கேள்வி

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை...

`பாஜக-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்!' – சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,"திமுக திட்டங்களை அறிவித்து நிதி...

Tasmac: `ரூ.1000 கோடி முறைகேடு' ED குற்றச்சாட்டு… அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

டாஸ்மாக் நிர்வாகத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மதுவிலக்கு...

TN Budget 2025: `நிறைய புதிய திட்டங்களை அறிவிச்சுருக்காங்க, ஆனா…' – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம்...