28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

"Tasmac நிறுவனத்தை முடக்க முயற்சி" – அமலாக்கத்துறை மீது அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு

Date:

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் பேபி கால்வாய் உள்ளது.

அக்கால்வாயை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ.28 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், “டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கவனித்து, சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்ல, அரசின் எந்தத் துறையிலும் தவறு நடக்கக் கூடாது என முதல்வர் தெளிவாக உள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளை அமலாக்கத்துறை நடத்திய விதம் வருத்தத்திற்குரியது. டாஸ்மாக் நிறுவனத்தை முடக்கும் விதமாக அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளது,” என்று கூறினார்.

அமைச்சர் முத்துசாமி

முதல்வர் ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்கு நியாயம் இருப்பதை, உச்ச நீதிமன்ற உத்தரவு காட்டுகிறது.

அரசியலமைப்புச் சட்டம்தான் எல்லாவற்றிற்கும் உயர்வானது என்பதை இந்தத் தீர்ப்பு உத்தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது.

இது தவறான அணுகுமுறையாகும். அமலாக்கத்துறை கூறும் அளவுக்கு தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'வேட்பாளர் கூட்டத்துக்கு தேர்தல் அதிகாரியின் காலில் விழுந்து அனுமதி கேட்டோம்' – குமுறும் தவெக மா.செ

தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜே.சி.டி பிரபாகர் வேட்பாளராக களமிறங்குகிறார்....

தலைமைச் செயலகத்தில் விஜய்! – தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு; என்ன புகார் கொடுத்தார்?

தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை...

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை? – அறிவித்தது திமுக!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது....

`செயல்பாடு அப்படி.!' அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் இல்லை – பின்னணியில் மூன்று காரணங்கள்!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட...