1
June, 2025

A News 365Times Venture

1
Sunday
June, 2025

A News 365Times Venture

“SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" -தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Date:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து இன்று (பிப் 3) வெளியாகியிருக்கும் அரசின் அறிவிப்பில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி.

கல்விக்கடன்

மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி

நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும்,

ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Ramadoss-ஐ மிரட்டும் Anbumani மூவ், நீதி பயணம் போகும் Ramadoss? | Elangovan Explains

ராமதாஸுக்கு எதிராக அன்புமணி போட்டிருக்கும் மூன்று நாள் மீட்டிங். அதில் குவிந்த...

பாமக : அப்பா – அம்மாவுக்கு பாராட்டு – Anbumani புது Strategy! | TVK VIJAY |Imperfect Show 30.5.2025

* நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை?* MLA பதவியை ராஜினாமா செய்வேன் -...

Kamal: 'புதிய கட்சிகளைப் பற்றி விமர்சிக்கக் கூடாது…'- தவெக விஜய் குறித்து கமல் பேசியது என்ன?

தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் மே 28...

“பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்" – உத்தவ் சிவசேனாவின் விமர்சனமும் பாஜக பதிலும்!

பஹல்காம் தாக்குதல் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. அதற்குப் பிறகு...