20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

Rajasthan: “நிலத்திற்குள் செல்ல முடியவில்லை, ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!'' -விவசாயி வினோத மனு

Date:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்ட கலெக்டர் டினா தாபிக்கு வினோதமான கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை ஜோராப்புராவை சேர்ந்த மங்கிலால் என்ற விவசாயி தான் அந்த வினோத மனுவுக்கு சொந்தக்காரர்.

கடந்த செவ்வாய்கிழமை நடந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்ட மங்கிலால் தனது மனுவில், “ஜோராப்புராவில் உள்ள எனது வீடு மற்றும் விவசாய நிலம் சுற்றியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், என்னால் வீட்டிற்கும், விவசாய நிலத்திற்கும் செல்ல முடியவில்லை.

ஹெலிகாப்டர் வசதி வேண்டும்!

இந்த ஆக்கிரமிப்பை கேரஜாராம் என்ற ஆசிரியர் செய்துள்ளார். வீட்டையும், நிலத்தையும் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து, அந்த நிலத்தில் சீரகத்தை பயிர் செய்துள்ளார். அவருடைய செயலால், என்னுடைய நிலத்தில் எதையும் பயிரிட முடியவில்லை.

இதுக்குறித்து காவல் நிலையம், நீதிமன்றத்தில் புகார் அளித்தும் பலனில்லை. என் வீடு மற்றும் நிலத்தை சுற்றி ரோடு இல்லாததால், என் வீட்டிற்கு செல்லவும், நிலத்தில் பயிர் செய்யவும் ஹெலிகாப்டர் வசதியை அரசு செய்து தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related