24
April, 2025

A News 365Times Venture

24
Thursday
April, 2025

A News 365Times Venture

Pahalgam Attack: பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை முடக்கிய இந்திய அரசு; தொடரும் அதிரடிகள்!

Date:

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து (Pahalgam Attack) இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு வாகா எல்லை மூடல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது இந்திய அரசு.

இன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ கணக்கை இந்தியாவில் முடக்கி உள்ளது இந்திய அரசு. அதனால், இனி யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை பார்க்க முடியாது.

இந்தியா முடக்கிய பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு உள்ளது என்று வலுவாக இந்தியா சந்தேகிக்கிறது. இதையடுத்து தான் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது.

ஆனால், ‘எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உலக அரங்கிலும் பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்தினால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நாங்களும் தயார்' – பாகிஸ்தான் உத்தரவை அடுத்து இந்தியா நடத்தி முடித்த ஏவுகணை சோதனை

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக...

Pahalgam Attack: “கார்கில் முதல் கன்னியாகுமரி வரை துக்கமும் ஆத்திரமும் நிறைந்திருக்கிறது" – மோடி

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம்...

`6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ – வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை...

J&K Attack: `பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள்’ – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி...