24
April, 2025

A News 365Times Venture

24
Thursday
April, 2025

A News 365Times Venture

Pahalgam Attack: 'உளவுத்துறையின் தோல்வி இது; மோடி அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்..' – அசாதுதின் ஓவைசி

Date:

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட  தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக இந்திய ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் அனந்த்நாக், பஹல்காம், பைஸ்ரான் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன.

Pahalgam Attack

இந்நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் (AIMIM) தலைவரும் ஹைதராபாத்  எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி ‘பஹல்காம் தாக்குதல் இந்திய உளவுத்துறையின் தோல்விதான்’ என்று கூறியிருக்கிறார். தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், “ இது ஒரு வேதனையான சம்பவம்.

பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கண்மூடித்தனமாகக் கொன்றிருக்கின்றனர். இந்த காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்விதான். நரேந்திர மோடி அரசு தங்களின் பயங்கரவாதத் தடுப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். உரி, புல்வாமா தாக்குதல்களை  விட இந்தத் தாக்குதல் அதிக கண்டனத்திற்குரியது.

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

ஏனெனில் அண்டை நாட்டில் இருந்து வந்த பயங்கரவாத கும்பல் குடிமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து தாக்கி இருக்கின்றனர். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam Attack: "சாவின் விளிம்பிலிருந்து தப்பினோம்" – காஷ்மீர் தாக்குதல் குறித்து சென்னைப் பெண்

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ...

Pahalgam Attack: “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல்...

சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? – வெயிலில் சிரமப்படும் பயணிகள்

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும்...

Pahalgam Attack: பின்னணியில் `TRF’ தீவிரவாதக் குழு… யார் இவர்கள்? | முழுத் தகவல்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடி...