30
June, 2026

A News 365Times Venture

30
Tuesday
June, 2026

A News 365Times Venture

Padma Awards: “மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்..'' – பத்ம விருது பெற்ற செஃப் தாமு

Date:

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார் உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷண் விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது. பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

பத்ம விருதகளை பெற்ற தமிழர்கள்

இந்த விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செஃப் தாமு, “மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்னு சொல்வாங்க. இந்த பத்மஶ்ரீ விருதப் பெற்றதை நான் சாதித்ததாக நினைக்கிறேன்.

நாட்டின் பெருமைமிகுந்த விருது. இது வாழ்நாள் சாதனை விருது. விருது வழங்க என் பெயரை அழைக்கும்போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, உணர்ச்சி வசப்பட்டுப்போனேன் நான்.

அதுவும் எனது சமையல் துறையிலிருந்தே இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்குது. தமிழ்நாட்டிலிருந்து விருது வாங்கியவன் என்கிற முறையில ரொம்பப் பெருமையாக இருக்கு.

எதிர்காலத்தில் என்னைப்போல சமையல் துறையில் நிறையபேர் சாதனை செய்து, இதுபோல விருதுகளைப் பெற நான் ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறேன். இந்தவிருதை சமையல் கலைஞருக்கும், என்னுடைய மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியாது' – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கணவரை விட கணிசமாக அதிக ஊதியம் பெறும் மனைவி, அவரிடமிருந்து ஜீவனாம்சம்...

'ஸாரி… எங்களால தோழமை கூட்டத்துக்கு வர முடியாது!' – முதல்வரின் அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட்டுகள்?

முதல்வர் விஜய் தலைமையில் நாளை தோழமைக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது...

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்…" – அன்புமணி ராமதாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட...

`அன்று எதிர்ப்பு… இன்று அனுமதி!' அணுக்கனிம சுரங்கத் திட்டத்தில் தவெகவின் இரட்டை நிலைப்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டம் தொடர்பாக தமிழக...