20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

NEP: “ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்..?'' – அமைச்சர் பொன்முடி விளக்கம்

Date:

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, “எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. தற்போது, மத்திய அரசு மூன்றுமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்தபோதிலும், இந்தியை கட்டாயமாக படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிராக தமிழக அரசு உறுதியாக நிற்கிறது.

அமைச்சர் பொன்முடி

நாம் ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளில் நுழைவுத் தேர்வு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை தடுக்கக்கூடிய ஒன்று. விழுப்புரம் கல்லூரியில் BA சேர வேண்டுமென்றாலும், ஒரு நுழைவுத் தேர்வு எழுதிப் பாஸ் செய்தால்தான் அனுமதி கிடைக்கும். இதனால் பணாம்பட்டு, கோலினூர் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு குறைந்து விடும்.

தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் இரண்டே போதும், மூன்றாவது மொழியாக இந்தி எதற்கு?. ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி, அதில் நாம் திறமையாக இருப்பதே முக்கியம். இந்திமீது எங்களுக்கு வெறுப்பு இல்லை, விருப்பமானவர்கள் அதைப் படிக்கலாம். ஆனால், அதை கட்டாயமாக்க முடியாது. நாங்கள் இருமொழிக் கொள்கையை மட்டும் ஏற்கிறோம், மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. நீங்கள் அனைவரும் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா… மும்மொழிக் கொள்கை நம்மீது திணிக்கப்பட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! – மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஈரம்',...

NEET: 'மாபெரும் உயிர்கொல்லும் Scam'- தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி தற்கொலை; உதயநிதி இரங்கல்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய...

"முதிர்ச்சியற்ற செயல்" முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கேரள காங்கிரஸ் எம்.பி!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் கருத்துக்கு முரண்பட்ட நிலையில் கேரளம்...

டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!' – மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையை...