29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

NEET exam: `பூணூல் கூடாது' மாணவனுக்கு நடந்த சம்பவம்; கர்நாடகாவில் வெடித்த போராட்டம்..

Date:

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

மாணவிகளின் ஆடைகளில் இருந்த பொத்தான்களை அகற்றியதாகவும், மூக்குத்தி, தாலி போன்றவற்றை கழற்றச் சொன்னதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் புதிய போராட்டம் ஒன்று வெடித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த கலபுர்கியில் உள்ள ஒரு பள்ளி, நீட் தேர்வு மையமாக செயல்பட்டது. அந்தப் பள்ளிக்கு தேர்வு எழுத வந்த ஸ்ரீபாத் பாட்டீல் என்ற மாணவர் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

இது குறித்து அந்த மாணவனின் தந்தை கூறுகையில், “ஸ்ரீபாத் பாட்டீல் தேர்வு எழுத அரை மணி நேரம் தாமதமாகச் சென்றார். அவரது பூணூலை கழற்றச் சொல்லி, தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால், அவர் தனது பூணூலை என் கையில் கொடுத்துவிட்டு, தேர்வு எழுதச் சென்றார்,” என்று தெரிவித்தார்.

மாணவனின் பூணூலை கழற்றச் சொன்ன தகவல் பரவியதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடகாவின் எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சம்பவம் குறித்து போராட்டம் நடத்தியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக...

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! – நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர...