1
July, 2025

A News 365Times Venture

1
Tuesday
July, 2025

A News 365Times Venture

Illegal Immigrants: `அடுத்தடுத்து…' – இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்!

Date:

‘அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன்’ என்று ட்ரம்ப் பிரசாரத்தில் கூறியதுபோல, அவர் அதிபரானதும் அந்த வேலையில் விறுவிறுவென களமிறங்கி செயல்பட்டு வருகிறது அமெரிக்க அரசு.

இந்த மாதத் தொடக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை கைவிலங்கிட்டு அமெரிக்காவின் ராணுவ விமான மூலம் வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. பஞ்சாப் அமிர்தசரஸில் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்திறங்கினர். இந்தியர்களை கை, கால் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அனுப்பியது ‘மனிதாபிமானமற்ற செயல்’ என்று நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியது.

‘இது அமெரிக்காவின் வழக்கமான நடைமுறை தான்’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி, இந்த எதிர்ப்புகளை கடந்தார்.

நான்காம் கட்ட விமானம்…

அடுத்தடுத்து அமெரிக்கா சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. அதில் நான்காவது கட்டமாக, சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 12 இந்தியர்களை மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவிற்கு அனுப்பியது அமெரிக்கா அரசு. அவர்கள் அங்கிருந்து நேற்று மாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

தரவுகளின் படி, ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து கிட்டத்தட்ட 350 சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...