14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்… தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

Date:

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரபல தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள ஆண்டாள் ஆறுமுகத்தின் வீட்டில், அபிராமிபுரம், பூக்கடை உள்ளிட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்தச் சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறைத் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், “ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்திற்குச் சொந்தமான மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.912 கோடி வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்டவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் ஆறுமுகத்திற்குத் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' – கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்… பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில...

TN Budget Highlights | TASMAC – செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED – Imperfect Show 14.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய்...

TN Budget 2025: 'சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு' – பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம்...