24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

Delimitation: `அவைக்குள் இதை அனுமதிக்க முடியாது!' – திமுக எம்பி-க்களை உடைமாற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

Date:

மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவை தொகுதிகள் வரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களுடன் டி. ஷார்ட் அணிந்த தி.மு.க எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஒ.எம். பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே, “#fairdelimitation. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட டி.ஷர்ட் அணிந்திருந்த திமுக எம்.பி-கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை 11 மணிக்கு அவை தொடங்கியபோது, அதே ஆடையுடன் அவைக்குள் நுழைந்தனர். அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை பராமரிக்க வேண்டும் என்று கூறும் சபையின் நடைமுறைகளின் விதி 349 ஐ மேற்கோள் காட்டி, டி-சர்ட்களில் உள்ள வாசகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

திமுக எம்.பி-கள்

மேலும், “தலைவர் யாராக இருந்தாலும் இதுபோன்ற கண்ணியமற்ற உடையை சபைக்குள் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே சென்று, உடைகளை மாற்றி, சரியான உடையில் வாருங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி, “அவைத் தலைவர் டி-சர்ட்டுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தது எங்களின் போராட்டத்துக்கான புதிய முன்னேற்றம். பா.ஜ.க உட்பட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதற்கு முன்பு கோஷங்கள் எழுதப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை, ​​அவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர்; அது கோடிக்கணக்கான மக்களை..!"- தவெக-வைச் சாடிய ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று...

இலவச சிலிண்டர்: “3 சிலிண்டர்கள் தானா? மீதி எப்போது?" – டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2...

பரந்தூர்: “இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" – அண்ணாமலை கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' – தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை,...