7
July, 2025

A News 365Times Venture

7
Monday
July, 2025

A News 365Times Venture

Delhi Earthquake: "மக்கள் நிதானமாக இருக்கவும்…" – டெல்லி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரதமர் அறிவுரை

Date:

தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 4.0 ரிக்டர் அளவில் 5 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. டெல்லி, நொய்டா, குர்கான் ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், உயரமான கட்டடங்களிலிருந்து அவசரமாக வெளியேறினர்.

Delhi Earthquake

இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 என்ற எண்ணைத்தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.

மறுபக்கம், நிலநடுக்கத்தின்போது ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த நபர் ஒருவர் ஊடகத்திடம் பேசுகையில், “நான் காத்திருப்பு அறையில் இருந்தேன். ஏதோ பாலம் இடிந்து விழுந்தது போல, ரயில்கள் மோதிக்கொண்டது போல அதிர்வை உணர்ந்தேன். உடனடியாக எல்லோரும் வெளியேறினர்” என்று சூழலை விளக்கினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் நிதானமாக இருக்கவும். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...