18
April, 2025

A News 365Times Venture

18
Friday
April, 2025

A News 365Times Venture

ADMK – BJP: "அதிமுக – பாஜக கூட்டணி தாமதத்துக்கு அண்ணாமலைதான் காரணமா?" – அமித் ஷா அளித்த பதில்

Date:

அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமித் ஷா இன்று உறுதி செய்திருக்கிறார். முன்னதாக, நேற்றிரவு சென்னை வந்திறங்கிய அமித் ஷா, மதியம் சுமார் ஒன்றரை மணிநேரம் குருமூர்த்தியுடன் அவரது இல்லத்தில் பேச்சவார்த்தை நடத்திவிட்டு, மாலை கிண்டி தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்திக்கத் தயாராக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை

அதன்படி, மாலை ஐந்து மணியளவில் கிண்டி தனியார் ஹோட்டலில் அமித் ஷா முன்னிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மேடையில் அமித் ஷாவின் வலதுபுறம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், இடதுபக்கத்தில் அண்ணாமலையும் அமர்ந்திருந்தனர். அப்போது பேசிய அமித் ஷா, “தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும்” என்று அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை உறுதி செய்தார்.

ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா - அண்ணாமலை
ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை

அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், “பா.ஜ.க-வின் மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இணைந்திருக்கிறதா? மாநில தலைவரின் குற்றச்சாட்டை முன்வைத்துதான் 2023-ல் அ.தி.மு.க வெளியேறியது. இதை பா.ஜ.க தலைமை எப்படிப் பார்க்கிறது?” என்று கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, “இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை. இன்றும் அண்ணாமலைதான் மாநிலத் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுக: "தலைமையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்காதீர்கள்" – கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்

தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க...

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு...

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில்...