27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

`பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்’ – தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர்!

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் பழனியில் அதிமுக வேட்பாளரே போட்டியிடுவார் என அறிவித்துள்ளதால், பாஜக-வினர் அதிருப்தியடைந்தனர். முருகனின் ஆறுபடைவீடுகளிலும் பாஜக-வினர் சீட் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் திருச்செந்தூர் தொகுதி மட்டுமே பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள பாஜக-வினர் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக முருகன் மாநாடு, வேல் யாத்திரை ஆகியவற்றை நடத்தி வரும் பாஜக-வினர், பழனி தொகுதி இந்த முறை தங்களுக்குத்தான் ஒதுக்குவார்கள் எனச் சொல்லி வந்தனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

இந்நிலையில் பழனி சட்டமன்றத் தொகுதி தங்களுக்கு அறிவிக்கபடாததால் விரக்தியடைந்து இன்று காலை சாலையில் கூடிய பாஜகவி-னர், “பழனி தொகுதி, பாஜக-விற்கே வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பியதோடு தேங்காய்களை உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச்...

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' – கொந்தளிக்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்,...

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! – நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை...

செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! – திமுக நிர்வாகிகள் ஷாக்!

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இன்றுக்குள் இறுதி செய்யும் என்று...