8
April, 2026

A News 365Times Venture

8
Wednesday
April, 2026

A News 365Times Venture

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

Date:

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.

 கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் எளிதாக தட்கல் டிக்கெட் எடுக்க முடிவதில்லை என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தட்கல் டிக்கெட் எடுப்பதில் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது ரயில்வே துறை.

என்ன?

இனி, ஆதார் தட்கல் டிக்கெட்டோடு இணைக்கப்பட உள்ளது. அதாவது ஆதாரை IRCTC இணையதளத்தோடு இணைக்க வேண்டும். இதன் மூலம், தட்கல் டிக்கெட் புக் செய்ய கொடுக்கப்படும் நேரத்தில் முதல் 10 நிமிடங்கள் ஆதாரை தனது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கோடு இணைத்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.

 ஐ.ஆர்.சி.டி.சியில் பதிவு செய்திருக்கும் ஏஜெண்டுகளுக்கு கூட, அந்த சமயத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.

முன்பதிவு செய்வதற்கான IRCTC இணையதளம்

எப்போது?

இந்த மாத இறுதியில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பாரதிய ரயில்வே விரைவில் இ-ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கும். இது உண்மையான பயனர்கள் தேவைப்படும்போது டிக்கெட்டுகளைப் பெற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் களம்:“தோல்வி பயத்தால் அவதூறு பரப்புவது முறையல்ல…" – தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது...

இந்திரா Vs காமராஜர்: தமிழகத்தை உலுக்கிய 1971-ன் அந்தச் 'சதுரங்க' தேர்தல் | Vote Vibes

1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய...

கிருஷ்ணசாமி-ன் வெற்றிக்குக் கைகொடுக்குமா ஒட்டப்பிடாரம்? – களநிலவரம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரம். தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க.,...

தென்காசி: விவசாயி மீது துப்பாக்கிச்சூடு – காவல்துறை மீது உறவினர்கள் புகார்; வழக்கு பதிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் சேட்...