25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

Operation Sindoor : 'இந்தியாவுக்கு உரிய பதிலடியை கொடுப்போம்!' – பாகிஸ்தான் பிரதமர் எதிர்வினை!

Date:

‘ஆப்பரேஷன் சிந்தூர்!’

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

Operation Sindoor

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ஆப்பரேஷன் சிந்தூருக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

‘பாகிஸ்தான் பிரதமர் எதிர்வினை!’

X தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘இழிவான எண்ணம் கொண்ட எதிரிகளை எப்போதும் வெல்லவிட மாட்டோம். போரை தூண்டும் வகையில் இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடியை கொடுக்க அத்தனை உரிமையும் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. உரிய பதிலடியும் கொடுக்கப்படும்.’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஷெபாஷ் ஷெரிப்
ஷெபாஷ் ஷெரிப்

இந்தியாவின் இரண்டு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவுத் தலைவர் சில மணி நேரத்துக்கு முன்பு கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' – காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச்...

ராமதாஸ் – அன்புமணி: `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க' – பாச சந்திப்பை புறக்கணித்த ஸ்ரீகாந்தி?

பா.ம.க-வில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை...

"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புரியவில்லை" – வைகோ

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக...