14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

உ.பி: `வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை'- முதல்வர் யோகி உத்தரவு

Date:

உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா முடிவடைந்ததையடுத்து, ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது அதிக அளவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதையடுத்து அதிக அளவில் ஒலி மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், “வழிபாட்டுத் தலங்களில் ஒலி மாசு ஏற்படுவதை நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மத வழிபாட்டு தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதோடு பசுமாடுகள் கடத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கும்படியும், அவ்வாறு கடத்துபவர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வளர்ச்சித் திட்டங்கள் தாமதம் அடையக் கூடாது என்றும், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஓர் அதிகாரியை நியமித்து கண்காணிக்கும்படியும், திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வாரம் ஒரு முறை அறிக்கை வாங்கும்படியும் அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வெயில் காலம் என்பதால் தண்ணீர் விநியோகம் தடையற்ற முறையில் நடைபெறவேண்டும் என்றும், கோதுமை கொள்முதல் மையங்களில் விவசாயிகளுக்கு மலிவுவிலையில் உணவு வழங்குவதை உறுதி செய்யும்படியும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குறைந்த விலை உணவகங்களை ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 10 கிரிமினல்களை அடையாளம் காணும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`₹'-க்கு பதில் `ரூ' : “பிராந்திய பேரினவாதம்'' – திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்!

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்தி...

`தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன’ – திருமாவளவன்

நெல்லை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை...

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில்...

”இந்தி ஈஸியான மொழி; இந்தி தெரிந்தால் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளலாம்” – டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...