11
August, 2026

A News 365Times Venture

11
Tuesday
August, 2026

A News 365Times Venture

"தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?" – காங்கிரஸை சாடிய தயாநிதி மாறன்

Date:

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.

இதில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 11 எம்.பிக்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள், ஐயுஎம்எல், மதிமுகவின் தலா எம்.பி என மொத்தம் 19 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

விஜய் தலைமையில் தமிழக எம்.பிக்கள் கூட்டம்

இந்நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் காங்கிரஸ் கட்சியை சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” தமிழ்நாட்டில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்?

தங்கள் Proxy அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த திரு.ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?

த.வெ.க அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?

Fair Delimitation என்ற நிலைப்பாட்டிலிருந்து No Delimitation என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?

அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

No Delimitation என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான திரு. ரேவந்த் ரெட்டி அவர்கள், Delimitation நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?

தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது PettyPolitics அன்றி வேறல்ல.

நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்” என்று தயாநிதி மாறன் சாடியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை: பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை – அதிர்ச்சி பின்னணி!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில்...

`தமிழ்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், ஜன கண மன என மொத்தம் 12 நிமிடங்கள் நிற்கணுமா?' – சசி தரூர் கேள்வி

கடந்த ஜூலை 29-ம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30-ம் தேதி மக்களவையிலும்...

விருட்டென கிளம்பிய சி.வி; கவிதை பாடிய கனிமொழி; 'பாசமலர்' பிரேமலதா – சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாம் நாள் கூட்டம் இன்று நடந்திருந்தது. கோபப்பட்டு...

திருக்குறள், பன்னிரு திருமுறைகள் ஆய்வாளர்களுக்கு ரூ.1 லட்சம் விருது: தமிழ்நாடு அறக்கட்டளை அறிவிப்பு!

'திருக்குறள் / பன்னிருதிருமுறைகள்' தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளையின்...