13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

“நன்றியுணர்வு கேள்வி… RSS திட்டப்படி ஆட்சிக்கு வர சதி" – வைகோவுக்கு மாணிக்கம் தாக்கூர் பதில்!

Date:

தி.மு.க கூட்டணியில், உதய சூரியன் சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட ம.தி.மு.க 4 இடங்களில் போட்டியிட்டது. அதில் 2 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு பாதகமாக வந்த நிலையில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளில் சில த.வெ.க-வுக்கு ஆதவளித்தன. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, “தி.மு.க ஆதரவோடு வெற்றி பெற்ற காங்கிரஸ் நன்றிகூட சொல்லாமல் சென்று தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றது. காங்கிரஸுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்.” எனப் பேசியிருந்தார்.

வைகோ

இதற்கு பதிலளிக்கும் வகையில் எம்.பி மாணிக்கம் தாக்கூர், `மூத்த தலைவர் வைகோ அவர்களுக்கும், அவர் பொதுவாழ்க்கைக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்பிற்கும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனினும், உரிய மரியாதையுடன் நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், நன்றியுணர்வு குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, அரசியல் கூட்டணிகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. 4ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பா.ஜ.க /ஆர்.எஸ்.எஸ் தரப்பின் முயற்சியின்படி தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுடன் தொடர்புகள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது.

பா.ஜ.க-வின் தூண்டுதலின் பேரில் தி.மு.க திரு.எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அ.தி.மு.க-வுடன் தொடர்புகளை ஆரம்பித்தது, மேலும் மறைமுக dealings நடந்தது, இயல்பாகவே காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், அந்தக் கவலைகளைப் பற்றி பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பது நியாயமானதோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதோ அல்ல. இந்தியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்பிற்குரிய சகாக்கள், தி.மு.க-வுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் தனது கொள்கைகள் தனது தொண்டர்கள் மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து நிற்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' – அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த...

இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா?

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி...