12
July, 2025

A News 365Times Venture

12
Saturday
July, 2025

A News 365Times Venture

Odisha: “தரமற்ற உணவு, அவமரியாதை..'' – ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற 116 மாணவர்கள்!

Date:

அரசு பள்ளியின் 116 மாணவர்கள் ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கிறது பாசிபிதா அரசு உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில், அரசு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களால் இழிவாக நடத்தப்படுவதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க 8, 9-ம் வகுப்பு படிக்கும் 116 மாணவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகம்

அதற்காக அனைத்து மாணவர்களும் நள்ளிரவு 12 மணிக்கு தங்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் நடந்து பரிபாடாவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, துணை ஆட்சியர், மாவட்ட நல அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) திட்ட இயக்குநர் (PD) ஆகியோரைச் சந்தித்து, தங்கள் பிரச்னைகளை முறையிட்டனர். வீடியோகால் மூலம் ஆட்சியரிடமும் பேசினர். அதைத் தொடர்ந்து, விரையில் அவர்களின் பிரச்னையை சரி செய்வதாக ஆட்சியர் வாக்களித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் விடுதிக்கு திரும்பினர். மாணவர்கள் தங்கள் விடுதிக்குத் திரும்பிச் செல்ல அதிகாரிகள் பேருந்து ஏற்பாடு செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...