தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை.
ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.
காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் தவெக-க்கு ஆதரவு அளித்திருக்கிறார்.
விசிக நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் வழங்கியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் யூனியனும், தவெக-விற்கு நிபந்தனையற்ற தரவளிப்பதாக கடிதம் வழங்கியிருக்கிறது.
இக்கடிதத்தை அருண்ராஜும், செங்கோட்டையனும், முஸ்லீம் லீக் யூனியனின் தலைவர் காதர் மொகிதீனிடமிருந்து பெற்றார்கள்.
பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்கிற நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகள், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, தவெக-விற்கு 120 எம்.ஏ.ஏக்கள் கிடைத்திருக்கிறார்கள்.




