18
March, 2026

A News 365Times Venture

18
Wednesday
March, 2026

A News 365Times Venture

'6 சீட்டுக்கு மேல கேக்காதீங்க!' முடிவைச் சொல்லிய திமுக – ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

Date:

சி.பி.எம் – தி.மு.க தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. குறைந்த சீட்டுக்கு ஒப்புக்கொள்ள சி.பி.எம் மறுத்த நிலையில் தி.மு.க-வே இறங்கி வர சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பெ. சண்முகம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க.

அதைதொடர்ந்து ‘எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்’ என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள். ஆனால், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 5 தொகுதிகளைதான் பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்.

நம்மிடம் பேசிய அறிவாலய புள்ளிகள், “கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஆரம்பத்தில் சொன்னது தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு.

பிறகு தலா 5 தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்தோம். இதற்கு ஒப்புக் கொண்ட சி.பி.ஐ மார்ச் 18-ம் தேதி காலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 5 தொகுதிகளுக்கு கையெழுத்திட வாய்ப்பே கிடையாது. எங்களுக்கு கூடுதல் தொகுதி கொடுங்கள் என கடும் நெருக்கடி கொடுத்து வந்தார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்” என்றனர்.

ஸ்டாலின்

நம்மிடம் பேசிய சி.பி.எம் நிர்வாகிகள், “கூடுதல் தொகுதி இல்லாமல் ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு இறுதி வரைக்கும் தி.மு.க ஒப்புக் கொள்ளவில்லை.

நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகும்கூட போனமுறை பெற்ற 6 தொகுதிகள் வேண்டுமானால் கிடைக்கும். இதற்குமேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்றுவிட்டனர். ஆகையால் தி.மு.க கொடுக்கும் 6 தொகுதிகளை பெற்றுக் கொள்ள சி.பி.ஐ மாநிலக் குழுவும் தயாராகிவிட்டது. நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை தராததால் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்கவுள்ளோம்” என்றனர்.

விரைவில் கூட்டணி இறுதி ஆகும் என்கிறார்கள் கூட்டணி வட்டாரத்தில்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" – மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

பொதுமக்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணச் சான்றொப்பம் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கும் நோட்டரி...

தவெக: "நான் முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான்" – கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய்யின் விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மகாபலிபுரத்திலுள்ள...

State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' – தள்ளிப்போடும் தலைமை?

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும்...

“ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" – கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான்...