19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்… திடீர் விசிட் அடித்த ஆட்சியர்!

Date:

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையில் உள்ளது. அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு சாத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதென தொடர் புகார்கள் வந்தது. மேலும், அவசர காலத்தில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியோ, பாதுகாப்புக்கு இரவு காவலரும் கிடையாது.

பூட்டு

இதுதவிர பணியில் இருக்கும் மருத்துவர்களும் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், சாத்தூர் சென்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சாத்தூர் பிரதான சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசு மருத்துவமனை வாயில் பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்து மருத்துவமனையின் பூட்டை திறந்து வெளியே செவலியர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மருத்துவமனை உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்களோ, காவலர்களோ ஏன் பணியில் இல்லை என கேட்டறிந்தார்.

நள்ளிரவில் ஆய்வு

தொடர்ந்து, மருத்துவமனை மருந்து இருப்பு விவரம், சிகிச்சை பெறும் நோயாளிகள், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய ஆட்சியர், இரவு நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இல்லாதது குறித்து சாத்தூர் தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விரிவான விசாரணை நடத்துமாறு அதககாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, சாத்தூர் அரசு தலைமை மருத்துவர் முனிசாயிகேசன் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை – பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள்...

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி – நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம்...

“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” – செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

ஊட்டி : தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் கழகங்கள் – கூட்டணிக்குள் வெடிக்கும் களேபரங்கள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு தேதி நெருங்கி வரும் சூழலில்,...