15
April, 2025

A News 365Times Venture

15
Tuesday
April, 2025

A News 365Times Venture

விருதுநகர்: "கிராமத்தைக் காணவில்லை; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு" – திடீர் போஸ்டரின் பின்னணி என்ன?

Date:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர் பகுதி முழுவதும் சினிமா படப் பாணியில் கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை என விளம்பரப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த போஸ்டரில், ‘தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! சிட்டிசன் சினிமா படப்பாணியில் 1933ம்ஆண்டு வைப்பாற்று வெள்ளத்தில் சாத்தூர் தாலுகா சூரன்குடி கிராமக் கணக்கிலிருந்த கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை.

திடீர் போஸ்டர்

இதுதொடர்பாக மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத சம்மந்தப்பட்ட சாத்தூர் ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடு இப்படிக்குக் கோட்டை சூரங்குடியில் வாழ்ந்த 18 சமுதாய வாரிசுதாரர்கள்’ என்ற பெயரில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ஊர்வாசிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “1933ம் ஆண்டுக்கு முன்பாகச் சாத்தூர் தாலுகா சூரன்குடி கிராமக் கணக்கில் கோட்டை சூரங்குடி எனும் கிராமம் இருந்தது.

கோட்டை சூரங்குடியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் பலர் வசித்து வந்தனர். 1933 பிறகு அந்த கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை எனச் சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளார்.

போஸ்டர்

இந்த மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மனுமீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோட்டை சூரங்குடியில் வாழ்ந்த 18 சமுதாய வாரிசுகள் என்ற பெயரில் சினிமா படத்தில் வரும் வடிவேலு காமெடி பாணியில் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று...

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும்,...

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர்...

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை… அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல்...