14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

"விஜய் என் நண்பர்தான்.. ஆனால்.." – எஸ்.பி. வேலுமணி கடும் விமர்சனம்

Date:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. திமுக Vs அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களம், இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது.

விஜய்

திமுக அதிமுக இரண்டு கட்சிகள் மீதும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் வைக்கிறார். பதிலுக்கு விஜய் மீது அதிமுகவினரும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற அதிமுக நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “புதிதாக சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். யார் வேண்டுமானால் கட்சி தொடங்கலாம்.

வேலுமணி

விஜய்யை பார்ப்பதற்காக அவரின் கட்சியினர் ஏராளமானோர் கரூர் வந்தனர். விஜய் கண் முன்னரே 41 மக்கள் கொத்து கொத்தாக விழுந்து இறந்தனர். விஜய் எதுவும் செய்யாமல் சென்னை ஓடினார். இப்போது வரை கரூர் செல்லவில்லை.

அதிமுகவில் சாதாரண ஒரு தொண்டருக்கு அடிபட்டால் கூட உடனடியாக சென்று பார்க்கிறோம். கரூரில் இருந்து சென்னை ஓடிய விஜய் ஒரு மாதம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அவரை ஆதரிக்கலாமா. விஜய் எனக்கு நண்பர்தான். ஆனால் இது சினிமா இல்லை.

உடைந்த மரம்
கரூர் கூட்ட நெரிசல்

சினிமாவில் கேமரா முன்பு நடித்து செல்வது போல, விஜய் கரூர் சம்பவத்தையும் அணுகியுள்ளார் அவருக்கு வாக்களித்து திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?"- விஜய்க்கு அதிமுக பதிலடி

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது....

இந்தியா மீது திடீர் 'ஐஸ்' மழையைப் பொழியும் சீனா! – இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained

இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார்...

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி...

அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி...