4
March, 2026

A News 365Times Venture

4
Wednesday
March, 2026

A News 365Times Venture

'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' – தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை

Date:

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மாரி செல்வராஜ்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார்.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா… எடப்பாடியை சந்தித்த சிட்டிங் திமுக எம்.எல்.ஏ வின் தந்தை

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின்...

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து...

மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி' சேர்க்கும் ஃபார்முலா!

நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ,...