8
April, 2026

A News 365Times Venture

8
Wednesday
April, 2026

A News 365Times Venture

வகுப்பறை மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம்; திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி அதிர்ச்சி

Date:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் ஊராட்சி தீவம்பாள்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 2022-23 ல் சுமார் 33,00,000 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தீவம்பாள்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 88 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வகுப்பறையில் அமர்ந்திருந்த நிலையில், கட்டட மேற்கூரையின் சிமென்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் வகுப்பறையில் அமர்திருந்த மாணவன் தேசிகன் (வயது 10) தலையில் விழுந்துள்ளது. இதனால் அவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கவியரசன் , கனிஸ்கர், சந்திரமோகன் ஆகிய மூன்று பேர் லேசான காயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரையும் அருகிலுள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தேசிகன் என்கிற மாணவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை முதன்மை அலுவலர் இரா.சௌந்தர்ராஜனை (பொறுப்பு) தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சரியான விளக்கம் தராமல் நமது அழைப்பை துண்டித்தார்!

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் களம்:“தோல்வி பயத்தால் அவதூறு பரப்புவது முறையல்ல…" – தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது...

இந்திரா Vs காமராஜர்: தமிழகத்தை உலுக்கிய 1971-ன் அந்தச் 'சதுரங்க' தேர்தல் | Vote Vibes

1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய...

கிருஷ்ணசாமி-ன் வெற்றிக்குக் கைகொடுக்குமா ஒட்டப்பிடாரம்? – களநிலவரம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரம். தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க.,...

தென்காசி: விவசாயி மீது துப்பாக்கிச்சூடு – காவல்துறை மீது உறவினர்கள் புகார்; வழக்கு பதிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் சேட்...