9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

வகுப்பறை மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம்; திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி அதிர்ச்சி

Date:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் ஊராட்சி தீவம்பாள்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 2022-23 ல் சுமார் 33,00,000 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தீவம்பாள்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 88 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வகுப்பறையில் அமர்ந்திருந்த நிலையில், கட்டட மேற்கூரையின் சிமென்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் வகுப்பறையில் அமர்திருந்த மாணவன் தேசிகன் (வயது 10) தலையில் விழுந்துள்ளது. இதனால் அவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கவியரசன் , கனிஸ்கர், சந்திரமோகன் ஆகிய மூன்று பேர் லேசான காயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரையும் அருகிலுள்ள திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தேசிகன் என்கிற மாணவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை முதன்மை அலுவலர் இரா.சௌந்தர்ராஜனை (பொறுப்பு) தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சரியான விளக்கம் தராமல் நமது அழைப்பை துண்டித்தார்!

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும்...

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ...

`பாகிஸ்தான் கபட வேடம்; இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு' -வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்...

NCP : `அஜித் பவார் – சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ – அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத்...