5
March, 2026

A News 365Times Venture

5
Thursday
March, 2026

A News 365Times Venture

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

Date:

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிலை குறித்து இரு தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் இன்று பேசினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து எங்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான தீர்வுகளுக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கத் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

இதற்கிடையில், போர் தீவிரமடைவது, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட வாய்ப்புள்ள தட்டுப்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர ‘பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம்’ மட்டுமே வழி என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அங்குள்ள நாடுகள் மற்றும் முக்கிய சர்வதேச நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் மேற்கு ஆசியாவிற்கு முக்கியப் பங்கு இருப்பதால், தற்போதைய நிலவரம் மிகுந்த கவலையை அளிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு ஆசியாவின் நிலையை இந்தியா மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், தேசிய நலனையும் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின்...

RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! – பின்னணி காரணம் என்ன?

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார்....

ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில்...

“நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்”- எப்படிச் சமாளிக்கப் போகிறது திமுக?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்த தி.மு.க-வுக்கு அடுத்த சிக்கல் பிற கூட்டணிக்...