பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமக-வில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று( ஏப்ரல் 13) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்தப் பிறகு பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
” மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும். இருவரும் சேர்ந்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துங்கள் என்று சொன்னோம். மாநாடு வேலையை நல்லப்படியாக பாருங்கள் என்று ஐயா சொன்னார். அதனால் ஒரு நல்ல அறிகுறி தெரிகிறது. விரைவில் நல்ல செய்தி வரும்.

வேகமாக மாநாடு வேலைகளைப் பார்க்கப்போகிறோம்” என்று ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார். மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் பாமக, ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs