1
June, 2025

A News 365Times Venture

1
Sunday
June, 2025

A News 365Times Venture

`நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா?' – ஆவேசமான பொன்னார்

Date:

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொடியேற்றுவிழா ஒன்றில் இன்று கலந்துகொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் சுனில் தலைமையில் முன்னாள் பிரதமர் வாய்பாய் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு நடந்த அந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கோபகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

`முதலமைச்சர் பத்திரிகைகளை படிக்க வேண்டும்’

பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் குற்றச்செயல்கள் மீதி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது அரசு. மாநிலத்தில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தினமும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு தீர்வு என்ன? அனைத்தையும் சமாளித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு அதை டைவர்ட் செய்து விடுகிறார்கள். தொடர்ந்து நடந்து கொண்டிருக்க கூடிய பாலியல் குற்றங்கள், திருப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் நடக்கக்கூடிய நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம்.

செய்தித்தாள்களை பார்த்தால் நல்லவிஷயங்களை விட போதை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் இந்த பத்திரிகைகளை எல்லாம் படிக்க வேண்டும். 2026 தேர்தலில் நிச்சயமாக இந்த அரசாங்கம் இருக்காது. இந்த அரசாங்கம் மிகப்பெரிய தோல்வியை அடையும். மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சியை பார்த்தால், எல்லா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க வந்துவிடக்கூடாது என்ற ஒற்றை விஷயத்தில் மட்டும்தான் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மற்றபடி எல்லா விஷயங்களிலும் அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்யும் வகையில் அவர்களால் செயல்படவும் முடியாது. தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக அவர் நடந்து கொண்டிருக்கிறார்.

கொடியேற்று விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன்

பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அந்த துறைகளை சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பள்ளிக்கூடங்களில் இந்தி பயிற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால், அவர்கள் விருப்பப்பட்டு வருகிறார்கள் என்கிறார்கள். இந்தி பிரசார சபா இல்லையா என கேட்கிறார்கள். இந்தி படிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய அமைப்பு அது.  அது மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட அமைப்பு. அது இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்தியை பரப்ப வேண்டும் என்று நீங்கள் பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களா. அதை நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள். இந்தியை பரப்புவதற்காக தான் நாங்கள் பள்ளிக்கூடங்களில் தொடங்கி இருக்கிறோம் என்று நீங்கள் சொன்னால் உங்களை ரோடு ரோடாக செருப்பு கழற்றி அடிப்பார்கள். முதலில் உங்கள் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுங்கள்.

இன்று தமிழ்நாட்டு மாணவர்கள் உலகை வெல்லும் சக்தி படைத்த மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அந்த வசதி செய்து கொடுப்பது அரசாங்கத்தினுடைய கடமை. அதை செய்ய மாட்டேன் என்று சொன்னால் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும். அப்பா ஸ்தானத்தில் இருந்து நீங்கள் நடக்க வேண்டும். குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுப்பேன் என்பதை மனதில் வைத்து நடந்தால் அது வரவேற்கவேண்டிய விஷயம். இல்லை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்ச்சி

தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வந்துபாருங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி சவால் விட்டிருப்பதாக நீங்கள் கேட்கிறீர்கள். அண்ணாமலை அல்ல நானே வருகிறேன். எப்போது வர வேண்டும் என நேரம் குறியுங்கள். தமிழக முதல்வர் அவர்களே இது தமிழ்நாடு. 8 கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும். அதில் அறிவாலயத்துக்கு முன்னால்  வரக்கூடாது என்றுச்சொன்னால் அது ரெட்லைட் ஏரியாவா. அங்கு வரக்கூடாது எனச்சொல்ல உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். கேவலமான ஒன்று. அந்த வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டும்.

ஒருபக்கத்தில் குழந்தைகள் அப்பா என அழைப்பதாக சொல்கிறார்கள். சரி சந்தோஷப்படுவோம். எங்கள் பக்கத்தில் வரக்கூடாது என்று சொன்னால் ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவுகொள்ள வேண்டும். ம.தி.மு.க தொடக்க காலத்தில் அக்கட்சியினர் பெரிய ஊர்வலமாக வந்து, இதே அறிவாலயத்தை தாக்கக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் வரும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா பாதுகாப்பு கொடுத்தார். இன்று அதை மாற்றி எங்கள் ஏரியாவுக்கு வந்துவிடாதீர்கள் என அவர்கள் சொல்கிறார்கள் என்றால். ஒன்று அவர்கள் தவறாக அறிவாலயத்தை நடத்துகிறார்கள் என்று பொருள்படும். சவால் விட்டால் நாங்கள் வருகிறோம். ரெட் லைட் ஏரியா என்பதால் பொன்.ராதாகிருஷ்ணன் வருகிறாரா என அடுத்ததாக ஒரு கேள்வி கேட்பார்கள். இந்த குசும்பு வேலைகள் எல்லாம் வேண்டாம். நீங்கள் சவால் விடுங்கள் நாங்கள் வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்” என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  கோவை விமான நிலையத்தில்...

“தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" – சி.பி ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்...