தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அந்தவகையில் மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து திருச்சியில் பிரசாரம் செய்த விஜய், “கேஸ் பிரச்னை எல்லாம் சரி ஆகிடுச்சா? டீ, கடை, ஹோட்டல்கள் எல்லாம் மூடிட்டாங்க. கேஸ் தட்டுபாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.
ஸ்டாலின் சார் வீட்டில பிரச்னைன்னா டெல்லி போய்விட்டு வருவாரு. கேஸ் பிரச்னைக்காக டெல்லி போய்விட்டு வரலாம்-ல.
நீட் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆச்சு. எதையெல்லாம் செய்ய முடியாதோ?
அதை தான் ஸ்டாலின் வாக்குறுதியா கொடுப்பாரு. அவரை மாதிரி பொய் வாக்குறுதி கொடுக்காமல் மக்களோட தேவைகளை அறிந்து செயல்படுவோம்.
அடிப்படை வசதிகளை செய்யாத தீய சக்தி திமுகவை தூக்கி வீசிறிடலாமா? இளைஞர்களோட வேலைவாய்ப்பை பறிச்சது திமுக தான்.
நகராட்சியில தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் லஞ்சம் பெற்ற அமைச்சர் திருச்சியில இருக்கார்.

கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சினு நிறைய பேர் சொல்றாங்க… அது மாதிரி ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி. இந்தத் தேர்தல்ல ஜனநாயகன் படம் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என பயந்து சூழ்ச்சி பண்ணிட்டாங்க. திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. யூஸ்லெஸ் அரசு இது. ஒரே ஒரு வாய்ப்பு எனக்கு கொடுங்க.” என்றார்.




