14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

“கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" – அண்ணாமலை அதிரடி

Date:

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதம் தடுக்கபட்டிருக்கலாம்.

அண்ணாமலை

இது காவல்துறை மற்றும் முதல்வரின் தோல்வி. பெட்ரோல், கேஸ் விவகாரத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்புவதால் பொது மக்கள் கேன்களுடன் சென்று பெட்ரோல் வாங்கும் நிலை இருக்கிறது. திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் தான் பீதியை கிளப்புகின்றனர்.

விளாத்திகுளத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்ல வேண்டும். உள்துறை செயலாளர் கொடுக்கும் தகவல்கள் பொய்யாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது  என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. யாரையும் எதிர்பார்த்து இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக சிபிஐ விசாரணை கேட்டது. அதற்கு நாங்களும் குரல் கொடுத்தோம். ஜனநாயகன் படம் பற்றி விஜய்யே பேசவில்லை, முதலில் அவர் பேசட்டும். பிறகு நான் பேசுகிறேன்.

கரூர் தவெக கூட்டத்தில் விஜய், ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்று சொன்ன போதுதான் செருப்பு வந்து விழுந்தது. மருத்துவமனைக்கு முதல் ஆளாக சென்றவர் செந்தில் பாலாஜி. அவரை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு எப்போதும் டிவிஸ்ட் இருக்கும்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த முறை என்ன டிவிஸ்ட் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை, பாஜக  விமர்சித்தது உண்மை. எடப்பாடி  பழனிசாமியும் என் மீது விமர்சனம் வைத்தார். அரசியலில் பின்னாடி திரும்பி பார்த்தால் அரசியல் செய்ய முடியாது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" – எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக்...

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில்...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள்...

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் – என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம்,...