10
March, 2026

A News 365Times Venture

10
Tuesday
March, 2026

A News 365Times Venture

கலைஞர் கனவு இல்லம்: ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழை மக்களுக்காக 4,29,394 வீடுகள்!

Date:

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமா பார்க்கும் கல்லா ஒருவருக்கும்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

பிறவும் எல்லாம் ஓரோக் கும்மே! -என்று புறநானூறு 189 ஆம் பாடல் சொல்கிறது. அதாவது அரசன் ஆயினும், ஆண்டி ஆயினும் அனைவரும் உண்பது ஒரு நாழி அளவுள்ள உணவே. அவர்களுக்கு இடுப்பில் உடுக்கும் துணியும், உடம்பின் மேல் அணியும் துணியும் என இரண்டு துணிகள்தான் தேவை; இதுபோல் பிற அனைத்தும் எல்லோர்க்கும் ஒரே அளவில்தான் தேவைப்படும் என்கிறது இந்த புறநானூற்றுப் பாடல் 

இவற்றுடன் எல்லோரும் மழை, வெயில் காலங்களிலும் புயல் வெள்ளக் காலங்களிலும் பாதுகாப்பாகத் தங்கி வாழ ஒரு வீடு என்பது மிகவும் முக்கியம் 

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்பதனை, ‘எலிவளை ஆயினும் தனிவளை தேவை’ என நம் நாட்டுப் பழமொழி கூறும்.

இவற்றின் அடிப்படையில்தான் நம் திராவிட மாடல் அரசு அனைவருக்கும் தேவைப்படும் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.

எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிட மாடல் அரசின் தத்துவத்தைத் தான் இந்தப் புறநானூற்றுப் பாடல் முழங்குகிறது.

கலைஞர் கனவு இல்லம்

கலைஞர் கனவு இல்லம்

எல்லோர்க்கும் உணவு தேவை. உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்குகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் நேரடி வருவாய் இல்லாத மகளிருக்கு நேரடியாகவே மாதம் ரூ.1000 தருகிறது. இந்த 1000 ரூபாயைக் கொண்டு தேவையானவைகளை வாங்கிக் கொள் என வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு!

அடுத்து, எல்லோர்க்கும் வீடு வேண்டும் அல்லவா?அதற்காகத்தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 இலட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 இலட்சம் வீடுகள் ரூ. 3500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது திராவிட மாடல் அரசு

இதில் ஒரு ஒப்பீடு 

2016-2021 ஐந்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில் 1 இலட்சம் வீடுகள் தான் கட்டப்பட்டன. ஆனால் 2024-2026 இரண்டே ஆண்டுகளில் 1,79,850 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, மேலும் 1 இலட்சத்து 20  ஆயிரத்து 150 வீடுகள் கட்டப்படுகின்றன. 

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல!

இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.3,058 கோடியில் 2.63 இலட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்தில் ஒரு ஒப்பீடு 

கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லம்

2016-2021 முந்தைய ஆட்சியில் 27,688 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய அயோத்திதாச பண்டிதர் குறியிருப்பு மேம்பாட்டுத்  திட்டத்தில் ரூ.482 கோடி மதிப்பீட்டில் 5281 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள்

2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில் 

 ரூ. 221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஒற்றைச் சாளர முறை திட்டத்தின்கீழ் 

24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது.

ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 இலட்சம் ஏழைகளின்   குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.  இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்னும் தத்துவத்தின்படி திராவிட மாடல் அரசு ஏழை எளிய நலிந்த சமுதாய மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டிற்குப் பெருமைகளைச் சேர்க்கிறது!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' – அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள்...

புதுச்சேரி: `ஹோட்டல்னு நினைச்சி தூங்கிட்டோம்'- ஆளுநரை அலற வைத்த போதை இளைஞர்; பதறிய போலீஸ்!

புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த...

Iran: `போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்' – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால்...

'உதயசூரியன் சின்னம்' – மதிமுகவை நிர்பந்திக்கும் திமுக; டென்ஷனில் துரை வைகோ?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க...