9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

ஒன் பை டூ

Date:

இரா.ராஜீவ்காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க

“தலைவர், உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அள்ளிக்கொடுத்துவருகிறது. அதேநேரம், தமிழ்நாடுபோல ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு எதிராக இருக்கும் மாநிலங்களின் மீது மறைமுகத் தாக்குதலை முன்னெடுத்துவருகிறது. ஜி.எஸ்.டி நிதிப் பகிர்வில் முரண்பாடு, கல்விக் கொள்கையில் தலையீடு, மாநில உரிமைகளைப் பறிப்பது எனப் பல செயல்பாடுகளிலும் தமிழகத்தைக் குறிவைத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது பா.ஜ.க. அதேபோல இன்னொரு பக்கம், ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநரைவைத்துக் குடைச்சல் கொடுப்பது என்று பல்முனைத் தாக்குதலை முன்னெடுத்து, தமிழகத்தை ஒரு தீண்டத்தகாத மாநிலமாக மாற்றுகிறார்கள் என்பதை எங்கள் தலைவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த ஆட்சியில் ஒன்றிய பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க அடிமைச் சேவகம் செய்து, மாநில உரிமைகளையெல்லாம் எழுதிக்கொடுத்து ஆட்சி நடத்திக்கொண்டிருந்தது. அதேபோல, தி.மு.க-வும் ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிடும் எனப் பகல் கனவு காண்கிறார்கள். என்னதான் அவர்கள் முட்டி மோதினாலும், பாசிச பா.ஜ.க-வின் திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது!”

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

“வரம்பு மீறிப் பேசுகிறார் முதல்வர். கடந்த சில வாரங்களாகவே இது போன்ற பொறுப்பற்றப் பேச்சுகளை முதல்வர் ஸ்டாலின் அதிக அளவில் பேசிவருகிறார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, தொழில் வளர்ச்சியில் பின்தங்கல், மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டம் எனத் தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதை மடைமாற்ற, ‘மாநில உரிமைகள் பறிபோகின்றன, இந்தியைத் திணிக்கப் பார்க்கிறார்கள், தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கும்’ என்றெல்லாம் இல்லாத பிரச்னைகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். தி.மு.க அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு ஆட்சியில், தி.மு.க எதையும் கேட்டுப் பெறவில்லை; காங்கிரஸும் தமிழகத்துக்கு எதையும் செய்யவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டு பா.ஜ.க ஆட்சியில், நிதிப் பகிர்வின் மூலம் இதுவரை 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசால் மறுக்க முடியுமா… ஆனால், பா.ஜ.க அரசு தமிழகத்துக்கு எதையுமே கொடுக்காததுபோல ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது தி.மு.க!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி – போர் பதற்றமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய...

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து...

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

பூகம்பங்களைக் கிளப்பவிருக்கும் ‘கிங்’ புள்ளி!சாம்பிராணி போட்ட காக்கி மாஜி...கட்சிக்காக உழைத்த சீனியர்கள்...

India – Pakistan Tension: ‘விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம்’ – இண்டிகோ அறிவிப்பு

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா 'ஆபரேஷன்...