10
May, 2025

A News 365Times Venture

10
Saturday
May, 2025

A News 365Times Venture

"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

Date:

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.

இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாகப் பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்ட எனக் கூறியது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்

இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் இந்தியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு, மருத்துவம் தொடர்பான பணியாளர்கள் விடுப்பின்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)
இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)

இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனச் சில வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதனைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL), “இந்தியா முழுவதும் எங்கள் எரிபொருள் பங்குகள் போதுமான அளவில் உள்ளன. எங்கள் விநியோக பாதைகள் முற்றிலும் சீராக இயங்கி வருகின்றன.

அச்சத்தின் அடிப்படையிலான பெருமளவு வாங்கும் செயல்கள் தேவையில்லை. எரிபொருளும் எல்பிஜியும் எங்கள் அனைத்து அவுட்லெட்டுகளிலும் எளிதில் கிடைக்கின்றன” என்று அறிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' – பாதுகாப்புத்துறை சொல்வதென்ன?

மூன்றாவது நாளாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது....

India Pakistan : `பாகிஸ்தான் ராணுவத்தின் மூன்று விமானத் தளங்களில் இந்தியா தாக்குதல்?’ – பிபிசி தகவல்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் நேற்று முன்தினம் முதல் இரு நாடுகளும்...

India – Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொடுத்த தக்க பதிலடி!

இந்தியா மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். ஆனால்,...

"தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் இன்னும் இருக்கின்றன; ஆனால்…" – முத்தரசன் சொல்வது என்ன?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவிற்கு வந்த...