19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

`இரட்டை இலை விவகாரம்; 2 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' – தேர்தல் ஆணையத்திடம் கோர்ட் கேள்வி

Date:

“இரட்டை இலை சின்னம், கொடி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்?” என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

வா.புகழேந்தி அளித்த புகார் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புகழேந்தி தொடர்ந்தார். அப்போது உடனடியாக பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையம் அவமதித்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டது.

இந்த முக்கிய வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வா.புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “புகார் கொடுத்து இரண்டு வருடங்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது” என்று வாதிட்டனர்.

புகழேந்தி

“புகார் மீது விசாரணை நடத்தினீர்களா? இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? எப்போது விசாரித்து தீர்வு காணப்படும்? உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதம் ஏன்?” என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

“சரியான காலத்தை தெரிவிக்க முடியாது, இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “இரட்டை இலை சின்ன விவகாரம் சம்பந்தமான புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டவர், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திமுக பக்கம் வந்தது தேமுதிக..! – அறிவாலயத்தில் பிரேமலதா

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

"சபரிமலை வழக்கில் இனியும் சிக்க வேண்டியவர்கள் இருந்தால் சிக்கட்டும்" – நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில்...

திமுக: சீட் எதிர்பார்க்கும் சார்பு அணிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள்! – வாய்ப்பளிக்குமா தலைமை?

வருகின்ற சட்டசபை தேர்தலில் இளைஞர் அணியினருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும், அதை...

கூட்டணி ஸ்பாம்..!

Source link