28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? – மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சொல்வது என்ன?

Date:

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனிடையே கோவிட் காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் இந்தியாவில் மீண்டும் விதிக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

கேஸ் சிலிண்டர்

இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

“மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக, நாட்டில் ஊரடங்கு (லாக்டவுன்) பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை.

இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அத்தகைய முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.

இத்தகைய நேரங்களில் நாம் அமைதியாகவும், பொறுப்பாகவும், ஒற்றுமையாகவும் இருப்பது முக்கியம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் வதந்திகளைப் பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்தும் முயற்சிகள் தீங்கு விளைவிக்கக் கூடும்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றித் தொடர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், இந்தியாவின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது.

உருவாகும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் – தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

முந்துவது யார்?தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான்...

'டிஜிட்டல் மயமான தமிழக மட்பாண்டக் குறியீடுகள்' – எப்படி இருக்கிறது தொல்லியல் குறியீடு இணையதளம்?

தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும்...

திருத்தணியில் அரி `டு' குமரியில் தளவாய் சுந்தரம் – இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதியின் 'திடீர் என்ட்ரி' – ஸ்டாலின் 'டிக்' செய்த பட்டியலில் மாற்றம்?!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்று...