12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" – மௌனம் கலைத்த மோடி

Date:

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல் முதல் கட்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 205 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அண்மையில் ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் நடத்தப்பட்ட விதம் இந்தியர்களைக் கொதிப்படையச் செய்தது.

எந்தவித முறையான இருக்கை வசதியும் இல்லாத சி-17 ரக ராணுவ விமானத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்கள் உட்காரவைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மோடி – ட்ரம்ப்

அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்பில் இது குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, “இந்தியாவின் இளைஞர்கள், ஏழை, எளிய மக்கள் குடியேற்றத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். பெரிய கனவுகளையும், வாக்குறுதிகளையும் நம்பி சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பலர் ஏன் கொண்டு வரப்படுகிறார்கள் என்று தெரியாமல் கொண்டு வரப்படுகிறார்கள். பலர் மனித கடத்தல் முறை மூலம் கொண்டு வரப்படுகிறார்கள்.

இந்த மனிதக் கடத்தலை எதிர்த்துத்தான் எங்களின் பெரிய போராட்டம் இருக்கிறது. இந்த மனிதக் கடத்தல் அமைப்புகளுக்கு முடிவு கட்டுவதில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

மோடி – ட்ரம்ப்

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக இருந்து வருகின்றன. எல்லையின் மறுபக்கத்தில் உருவாகும் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று பேசியிருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த...

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' – நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி,...

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி...

வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த...