14
April, 2025

A News 365Times Venture

14
Monday
April, 2025

A News 365Times Venture

`ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது’ – தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

Date:

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது தவறானது எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு – ஸ்டாலின் – ஆர்.என்.ரவி

இது தொடர்பாக அரசு செயலாளர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது 08.04.2025 தேதியிட்ட மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் அடிப்படையில். கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்முடிவு எண் 48/2022, தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும். அதன் அடிப்படையில் 10 மசோதாக்களும் சட்டமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதாவும் சட்டமாகியுள்ளது. இதனால் இனிமேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வர் வசமாகியுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: 'நம் சமூகத்தில் சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்'-அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈசிஆர் பகுதியில்...

பாமக: 'நல்ல அறிகுறி தெரிகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்'- கட்சி விவகாரம் குறித்து ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே...

`பதவி மோகத்தில் தமிழ்நாட்டை பாழாக்கியவர் பழனிசாமி; இதெல்லாம் அமித் ஷாவுக்கு தெரியுமா?’ – ஸ்டாலின்

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை,...

“மௌனச்சாமி எடப்பாடி; பாஜக – அதிமுக கூட்டணி 3, 4 வாரத்திற்குள் முடிந்துவிடுமா?'' – வைகோ சந்தேகம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்...