1
June, 2025

A News 365Times Venture

1
Sunday
June, 2025

A News 365Times Venture

ஆபரேஷன் சிந்தூர்: சசி தரூர் தலைமையில் கனிமொழி உள்ளிட்ட எம்.பிகள் வெளிநாட்டு பயணம்; காரணம் என்ன?

Date:

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது இந்தியா.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப் பின், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தது.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு அனுப்பி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்க உள்ளது. இதில் ஐக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அடங்கும்.

மத்திய அரசின் அறிவிப்பு

யார் யார் செல்கிறார்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதும் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இந்தத் திட்டத்திற்கு அனுப்பப்போவதில்லை. இதில் அனைத்து கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதன் படி, இந்தத் திட்டத்தில் மூலம் கூட்டாளி நாடுகளுக்கு செல்லப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

1. சசி தரூர், காங்கிரஸ்

2. ரவி சங்கர் பிரசாத், பாஜக

3. சஞ்சய் குமார் ஜா, ஜனதா தளம்

4. பைஜயந்த் பாண்டா, பாஜக

5. கனிமொழி கருணாநிதி, திமுக

6. சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ்

7. ஶ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சிவ சேனா

இந்தக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்க உள்ளார்.

எப்போது செல்வார்கள்?

இவர்கள் இந்த மாத இறுதியில் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இது கிட்டதட்ட 10 நாள் பயணமாக இருக்கும்.

என்ன செய்வார்கள்?

இவர்கள் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு சென்று இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்குவார்கள். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர்கள் அந்த நாடுகளில் எடுத்துரைப்பார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பாமக : அப்பா – அம்மாவுக்கு பாராட்டு – Anbumani புது Strategy! | TVK VIJAY |Imperfect Show 30.5.2025

* நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை?* MLA பதவியை ராஜினாமா செய்வேன் -...

Kamal: 'புதிய கட்சிகளைப் பற்றி விமர்சிக்கக் கூடாது…'- தவெக விஜய் குறித்து கமல் பேசியது என்ன?

தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் மே 28...

“பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்" – உத்தவ் சிவசேனாவின் விமர்சனமும் பாஜக பதிலும்!

பஹல்காம் தாக்குதல் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. அதற்குப் பிறகு...

“எங்களுக்கு மட்டும் திராவிட `புல்டோசர்’ மாடல்” – வேதனையில் கொதிக்கும் அனகாபுத்தூர் மக்கள்!

`நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்` எனச் சொல்லி 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர்,...