9
March, 2026

A News 365Times Venture

9
Monday
March, 2026

A News 365Times Venture

'அரசியலில் தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக' – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

Date:

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அந்த வழக்கில் உழைத்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வானதி சீனிவாசன்

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 82 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வயதானவர்கள் வீட்டில் தனியாக வாழ்வதற்கு கூட பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.

சட்டவிரோத மது, போதை விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையை தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. திராவிட மாடல் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வியடைந்த அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்யின் மகளிருக்கான வாக்குறுதிகளை வரவேற்கிறேன். வாக்குறுதிகள் நல்லதாக இருக்கலாம். ஆனால் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.

விஜய் தனித்து ஆட்சி அமைப்பார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். விஜய் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவருக்கு வாய்ப்பு இல்லை ராஜா என்று தான் சொல்ல வேண்டும். நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டேன். அரசியல் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் – திமுக

தனி மனித வாழ்க்கையில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் என்கிற கலாசாரத்தை திமுக உருவாக்கியுள்ளது. ஸ்டாலினுக்கு கண்ணை மூடி திறந்தாலே பாஜக தான் கண்ணுக்கு தெரிகிறது. அதனால் எங்களை விமர்சிக்கிறார்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் போர் விவகாரம்: “இதுதான் இந்தியாவின் நிலைபாடு" – அமைச்சர் ஜெய்சங்கர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான...

`அதிமுக கூட்டணி… சாரி, மோடியும், அமித் ஷாவும் கோபித்துக்கொள்வார்கள்" – முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநாடு, நிர்வாகிகள்...

“டெல்லிக்கு அழைத்த சி.பி.ஐ… பனையூரில் முகாமிடும் விஜய்” – பின்னணி என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைக்க கடுமையான முயற்சிகள் நடப்பதாக ஒருபுறம்...

கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் – விசாரணைக்கு உத்தரவு!

கோவை வடவள்ளி 36-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை...