16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

'அய்யாதான் குலதெய்வம்; பொறுப்பிலிருந்து விலகுகிறேன்' – வெடித்த மோதலுக்கிடையே முகுந்தன் திடீர் முடிவு

Date:

பாமக நிறுவனரான ராமதாஸ் இன்று காலை தைலாபுர தோட்டத்தில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவரது மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணிக்கு எதிராக பல விஷயங்களையும் பேசியிருந்தார்.

அன்புமணி, ராமதாஸ்!

‘பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லாவிடில் நீங்கள் எனக்கு கொள்ளிதான் வைக்க வேண்டும் என அன்புமணி மிரட்டினார். பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என அன்புமணியும் சௌமியாவும் காலில் விழுந்து கேட்டனர்.’ என்றெல்லாம் பேசி அரசியல் களத்தை பரபரப்பாக்கி விட்டிருந்தார்.

நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்த ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் இப்போது முழுமையாக வெளியுலகுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், இருவரின் மோதலுக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்த பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் இப்போது அக்கட்சியிலிருந்து விலகுவதாக அன்புமணிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

முகுந்தன்
முகுந்தன்

மருத்துவர் அய்யா தான் குலதெய்வம்

‘பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.’ எனக் கூறியிருக்கிறார்.

ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மோதலுக்கு இடையே முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்,

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான...

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' – அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும்...

பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! – அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பேராவூரணி. கடமைடை...

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' – குமுறும் கிராமத்தினர்!

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும்...